Monday, June 24, 2013

கேதாரிநாத் வெள்ளச் சேதம்: சாமியார்கள் என்னும் கொள்ளையர்கள்!

உத்தர்கண்ட் மாநிலம் கேதாரிநாத் எனும் யாத்ரீக தலத்தில் வெள்ளத்தில் சிக்கிய பெண்கள் பாலியல் பலாத்காரத்துக்குள்ளாக்கப்படுவதாகவும்
அவர்களின் நகைகள் கொள்ளையடிக்கப் படுவதாகவும் மீட்புப் பணியில் ஈடுபட்ட அரசு அதிகாரிகள் வாயிலாக செய்திகள் வெளிவந்தன.

பாதிப்புக்குள்ளான மக்களிடமே  படுபாதக கொடூரச் செயல்களில் ஈடுபட்டவர்கள் பாபாக்கள் என்றும்,  யாத்ரீகர்கள் வணங்கி வந்த சாமியார்களே அக்கொள்ளையர்கள் என்பதையும் மீட்புப் பணியில் ஈடுபட்டோர் அம்பலப்படுத்தியுள்ளனர்.


சந்தேகத்துக்குரிய வகையில் நடமாடிய சாமியார்களிடம் இருந்து  சேறும் சகதியுமாக நனைந்து போய் சுமார் ரூ1.25 கோடி பணம்  கடந்த இரண்டு நாள்களில் கைப்பற்றப்பட்டிருப்பதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.

பிடிபட்ட சாமியார்களிடம் பணத்தை வைத்து நடத்தப்பட்ட விசாரணையில் அவை அனைத்துமே யாத்ரீகர்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்டவையே என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

No comments:

Post a Comment