Monday, May 28, 2012

ரிமாண்ட் ஆவண நகல்களை காஸ்மிக்கு வழங்க நீதிமன்றம் உத்தரவு!


Kazmi has a right to get copies of remand papers- Court
புதுடெல்லி:இஸ்ரேல் தூதரக கார் குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மூத்த பத்திரிகையாளர் செய்யத் முஹம்மது அஹ்மது காஸ்மிக்கு போலீஸ், அவரை காவலில் வைத்திருப்பதற்கான (ரிமாண்ட்) ஆவணங்களின் நகல்களை வழங்குமாறு டெல்லி கூடுதல் அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
போலீசார் வசமிருக்கும் ரிமாண்ட் ஆவணங்கள் ரகசியமானது அல்ல. என்ன காரணத்தால் காலவரையற்று காஸ்மியின் போலீஸ் காவல் நீட்டிக்கப்படுகிறது? என்பதை அறிவது காஸ்மியின் அடிப்படை உரிமையாகும் என்று கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி சுரீந்தர்சிங் ராதி கூறினார்.
காலவரையற்று போலீஸ் கஸ்டடியின் கால அவகாசத்தை நீட்டிப்பதன் காரணம் குறித்து அறிவதற்கு ரிமாண்ட் ஆவண நகல்களை காஸ்மி கோரியிருந்தார். ஆனால், இக்கோரிக்கையை மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றம் நிராகரித்தது. இதனைத் தொடர்ந்து அவர் கூடுதல் அமர்வு நீதிமன்றத்தை அணுகினார். எந்த கட்டத்திலும் குற்றம் சாட்டப்பட்டவரின் கோரிக்கைக்கு ஏற்ப ஆவணங்களின் நகல்களை வழங்க டெல்லி உயர்நீதிமன்றத்தின் பல்வேறு தீர்ப்புகள் அதிகாரம் வழங்குவதாக நீதிபதி சுட்டிக்காட்டினார்.

No comments:

Post a Comment