Thursday, May 24, 2012

உ.பி குண்டுவெடிப்பில் 6 பேர் பலி!


6 dead in Allahabad blast
அலகாபாத்:உத்தரபிரதேச மாநிலம் அலகாபாத்தில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் சிறார்கள் உள்பட ஆறுபேர் கொல்லப்பட்டனர். 15 பேருக்கு காயம் ஏற்பட்டது.
நேற்று பிற்பகல் 3.30 மணியளவில் குண்டுவெடித்துள்ளது.சம்பவம் நடத்த இடம் குடிசைப் பகுதியாகும். இங்கு குப்பை பொறுக்குபவர்கள் அதிக அளவில் வசித்து வந்துள்ளனர். குண்டு வெடிப்பு சம்பவத்தை அடுத்து போலீஸôர் அப்பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர். நாட்டு வெடிகுண்டுகள் அங்கு தயாரிக்கப்பட்டனவா அல்லது குப்பை பொருள்களுடன் சேர்ந்து அங்கு வந்ததா என்பது குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
படுகாயமடைந்த 15 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 7 பேரது நிலைமை கவலைக்கிடமாகவே உள்ளது.

No comments:

Post a Comment