வாஷிங்டன்:ஈரான்
சிறையில் அடைக்கப்பட்டுள்ள கிறிஸ்தவ பாதிரியார் யூஸஃப் நதகானியை ஈரான்
விடுதலைச் செய்யாவிட்டால் திருக்குர்ஆன் பிரதியை எரித்து, முஹம்மது நபியின்
படத்தை வரையப் போவதாகவும் வெறிப்பிடித்த அமெரிக்க கிறிஸ்தவ பாதிரியார்
டெர்ரி ஜோன்ஸ் கூறியுள்ளான்.
கடந்த ஆண்டு அமெரிக்காவின் ஃப்ளோரிடாவில்
திருக்குர்ஆன் பிரதியை எரிக்கப்போவதாக அறிவித்து சர்ச்சையில் சிக்கிய
டெர்ரி ஜோன்ஸ், வருகிற 28-ஆம் தேதி ஐந்து மணிக்கு முன்பு யூஸஃப் நதகானியை
விடுதலைச்செய்ய வேண்டும் என்று கெடு விதித்துள்ளான். ஸ்டான் அப் அமெரிக்கா
நவ் என்ற டெர்ரி ஜோன்ஸின் இணையதளத்தில் இச்செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
கிறிஸ்தவ மதத்திற்கு மாறியதை தொடர்ந்து
மரணத்தண்டனை விதிக்கப்பட்டு நதகானி சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக
கூறப்படுகிறது. நதகானியை கொலைச் செய்யவோ அல்லது விடுதலைச் செய்யாமல்
இருந்தாலோ உலகில் அனைவரும் திருக்குர்ஆன் பிரதியை எரிக்கவேண்டும் என்று
ஜோன்ஸ் அழைப்பு விடுத்துள்ளான்.
No comments:
Post a Comment