Wednesday, December 26, 2012

சீனாவின் மீது அணு குண்டை வீச திட்டமிட்ட கென்னடி!


Chinese_nuclear_bomb_-_A2923வாஷிங்டன்:1962-ஆம் ஆண்டு சீனா, இந்தியாவை தாக்குவதற்கு  6 மாதங்கள் முன்பாக அந்நாட்டின் மீது அணுகுண்டை வீச அமெரிக்க அரசு ஆலோசித்த  தகவல் வெளியாகியுள்ளது.
கம்யூனிச தேசம் இந்தியாவை தோற்கடிப்பதை தடுப்பதற்காகவே இவ்வாறு ஆலோசனை நடத்தியதாக கென்னடி குடும்பத்தில் பிரபல நபர் காரலைன் கென்னடியும், டெட்விட்மரும் இணைந்து எழுதியுள்ள ’லிசனிங் இன்:தி சீக்ரெட் வைட் ஹவுஸ் ரெக்கார்டிங் ஆஃப் ஜான் எஃப் கென்னடி’ என்ற நூலில் கூறப்பட்டுள்ளது.

மீண்டும் சீனா, இந்தியாவை தாக்கினால் சீனாவில் அணு குண்டை வீசவேண்டும் என்று 1963-ஆம் ஆண்டு மே 9-ஆம் தேதி வெள்ளை மாளிகையில் மூத்த ராணுவ தலைவர்களும் பாதுகாப்புச் செயலாளர் ராபர்ட்
மக்னமராவும் பங்கேற்ற கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டிருந்தது.

No comments:

Post a Comment