
வாஷிங்டன்:ஈரான் சிறையில் அடைக்கப்பட்டு மரணத்தண்டனையை எதிர்பார்த்து காத்திருக்கும் கிறிஸ்தவ பாதிரியாரை விடுதலைச் செய்யாவிட்டால் திருக்குர்ஆன் பிரதியை எரித்து, இறைத்தூதரின் படத்தை வரைவேன் என்று மிரட்டல் விடுத்த அமெரிக்காவைச் சார்ந்த கிறிஸ்தவ பாதிரி டெர்ரி ஜோன்ஸ் புனித திருக்குர்ஆனின் பிரதியை எரித்துள்ளான்.
ஃப்ளோரிடாவைச் சார்ந்த பாதிரியான டெர்ரிஜோன்ஸ் இந்த ஈனத்தனமான செயலலில் ஈடுபட்டதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸ் 271 டாலர் மட்டும் அபராதம் விதித்துள்ளது. மேலும் அங்கு வந்த தீயணைப்பு படையினர் ஜோன்ஸிற்கு அடிகொடுத்து கவனித்தனர்.
ஆனால், உலக முஸ்லிம்களின் உணர்வுகளை புண்படுத்திய ஜோன்ஸ் கைது செய்யப்படவில்லை.
சில தினங்களுக்கு முன்பு ஜோன்ஸ், புனித திருக்குர்ஆனின் பிரதியை எரிக்கப் போவதாக மிரட்டல் விடுத்தான். இதற்கு முன்பும் இதேபோன்றதொரு அறிவிப்பை வெளியிட்டுள்ளான் ஜோன்ஸ். ஆனால், அமெரிக்க அரசு ஜோன்ஸ் மீது உரிய நடவடிக்கையை இதுவரை எடுக்கவில்லை.
No comments:
Post a Comment