Wednesday, May 16, 2012

ஹஜ் நல்லெண்ணக் குழு:நிபந்தனைகளை வெளியிட தகவல் உரிமை ஆணையர் உத்தரவு!


Indian Haj goodwill delegation
புதுடெல்லி:ஹஜ் நல்லெண்ணக்குழுவில் இடம்பெறும் பிரதிநிதிகளை தேர்வுச் செய்வதற்கான அளவுகோலை பகிரங்கமாக வெளியிட வேண்டும் என பிரதமர் அலுவலகத்திற்கு மத்திய தகவல் உரிமை ஆணையர்(சி.ஐ.சி) உத்தரவிட்டுள்ளார்.
கமிஷனின் இணையதளத்தில் இதுத்தொடர்பான தகவலை வெளியிட்டிருக்க வேண்டும். ஆனால், இவ்விவகாரத்தில் வெளிப்படையான தன்மை அத்தியாவசியம் என்பதால் உத்தரவை பிறப்பித்துள்ளதாக தகவல் உரிமை ஆணையர் ஷைலேஷ் காந்தி விளக்கமளித்துள்ளார்.
நல்லெண்ணக் குழுவில் தன்னை தேர்வுச் செய்யாததன் காரணம் குறித்து விளக்களிக்க கோரி ஜம்மு-கஷ்மீர் தகவல் அறியும் உரிமை ஆர்வலர் வழக்கறிஞர் அப்துல் ரஷீத் ஹஞ்சூரா சமர்ப்பித்த மனுவில் ஆணையம் இந்நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
வழக்கறிஞர் தொழிலில் தனக்கு 30 ஆண்டுகள் அனுபவம் இருப்பதாகவும், ஏராளமான சமூக-தன்னார்வ அமைப்புகளில் உறுப்பினராக இருப்பதாகவும் அப்துல் ரஷீத் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
மத்திய அமைச்சர்கள், எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள் உள்ளிட்ட உயர்மட்ட முஸ்லிம் நபர்கள் பிரதமரின் ஹஜ் நல்லெண்ணக் குழுவில் இடம்பெறுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment