Saturday, January 14, 2012

2002 குஜராத் இனக்கலவரம்: கைது செய்யப்பட்ட ஹிந்துக்களை விடுதலைச்செய்ய உத்தரவிட்ட மோடி


nmodi
அஹமதாபாத் 2002 குஜராத் இனக்கலவர வழக்குகளில், நரேந்திர மோடிக்கெதிராக போர்க்கொடி தூக்கியுள்ள முன்னால் கூடுதல் போலீஸ் இயக்குனர் ஆர்.பி.ஸ்ரீகுமார், தற்போது மேலும் ஒரு மனுவை நானாவதி கமிஷன் முன் சமர்பித்துள்ளார்.
அதில் கூறப்பட்டுள்ளதாவது, கலவரத்தில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டுள்ள ஹிந்துக்களை உடனடியாக விடுதலை செய்யும்படி மோடி உத்தரவிட்டுள்ளதாக குஜராத்தின் அப்போதைய தலைமை செயலாளர் அசோக் நாராயணன் தன்னை தொடர்புகொண்டு தெரிவித்ததாக கூறியுள்ளார். இது தொடர்பான தொலைபேசி உரையாடல்களையும் ஸ்ரீகுமார் சமர்பித்துள்ளார்.
இது மோடிக்கெதிராக  ஸ்ரீகுமார் சமர்பித்த ஒன்பதாவது மனுவாகும்.

No comments:

Post a Comment