Monday, October 24, 2016

சவூதி அரேபியாவின், மன்னராட்சி முடிவுக்குவரும்'

இப்னு அப்துல் லத்தீப்-

حدثنا سليمان بن داود الطيالسي حدثني داود بن إبراهيم الواسطي حدثني حبيب
بن سالم عن النعمان بن بشير قال كنا قعودا في المسجد مع رسول الله صلى
الله عليه وسلم وكان بشير رجلا يكف حديثه فجاء أبو ثعلبة الخشني فقال يا
بشير بن سعد أتحفظ حديث رسول الله صلى الله عليه وسلم في الأمراء فقال
حذيفة أنا أحفظ خطبته فجلس أبو ثعلبة فقال حذيفة قال رسول الله صلى الله
عليه وسلم تكون النبوة فيكم ما شاء الله أن تكون ثم يرفعها إذا شاء أن
يرفعها ثم تكون خلافة على منهاج النبوة فتكون ما شاء الله أن تكون ثم
يرفعها إذا شاء الله أن يرفعها ثم تكون ملكا عاضا فيكون ما شاء الله أن
يكون ثم يرفعها إذا شاء أن يرفعها ثم تكون ملكا جبرية فتكون ما شاء الله
أن تكون ثم يرفعها إذا شاء أن يرفعها ثم تكون خلافة على منهاج النبوة ثم
سكت قال حبيب فلما قام عمر بن عبد العزيز وكان يزيد بن النعمان بن بشير
في صحابته فكتبت إليه بهذا الحديث أذكره إياه فقلت له إني أرجو أن يكون
أمير المؤمنين يعني عمر بعد الملك العاض والجبرية فأدخل كتابي على عمر بن
عبد العزيز فسر به وأعجبه

அமீர்கள் தொடர்பாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஹதீஸை மனனம் செய்திருக்கின்றீரா? என்று அபூ ஸஃலபா கேட்டார். நான் நபியவர்களின் சொற்பொழிவை மனனம் செய்துள்ளேன் என்று கூறி ஹூதைபா (ரலி) அவர்கள் பின் வருமாறு கூறினார்கள்.

"நபித்துவம் எவ்வளவு காலம் இருக்க வேண்டும் என அல்லாஹ் நாடியுள்ளானோ அந்த அளவு நபித்துவம் இருக்கும். பிறகு அல்லாஹ் நாடும் போது உயர்த்த வேண்டிய தருனத்தில் அதை உயர்த்தி விடுவான். பிறகு நபித்துவத்தின் வழியில் கிலாஃபத் ஆட்சி அமையும். அல்லாஹ் எந்த அளவுக்கு நாடியுள்ளானோ அந்த அளவு அது நீடிக்கும். பிறகு அல்லாஹ் நாடும் போது உயர்த்த வேண்டிய தருனத்தில் அதை உயர்த்தி விடுவான். பிறகு கடினமான மன்னராட்சி அமையும். அல்லாஹ் எந்த அளவுக்கு நாடியுள்ளானோ அந்த அளவுக்கு நீடிக்கும். பிறகு அல்லாஹ் நாடும்போது உயர்த்த வேண்டிய தருனத்தில் அதை உயர்த்தி விடுவான். பின்னர் அடக்குமுறையைக் கொண்ட மன்னராட்சி அமையும். அல்லாஹ் எந்தளவுக்கு
நாடியுள்ளானோ அந்த அளவுக்கு அது நீடிக்கும். பிறகு அல்லாஹ் நாடும் போது உயர்த்த வேண்டிய தருனத்தில் அதை உயர்த்தி விடுவான். பிறகு நபித்துவ வழியில் கிலாஃபத் ஆட்சி அமையும் என்று நபியவர்கள் கூறி முடித்து அமைதியாகி விட்டார்கள்" நூல் : அஹ்மத் 17680.

இந்த ஹதீஸின்படி “அடக்குமுறை கொண்ட மன்னராட்சி உருவாகும் என்றும் மீண்டும் நபித்துவத்தின் அடிப்படையில் கிலாபத் உருவாகும்” என்பதும் அல்லாஹ்வின் தூதரின் முன்னறிவிப்பு.

இப்போது ஒரு வகையான அடக்குமுறையே சவுதியில் உள்ளது என்பது கண்கூடு. ஆனால் இதைவிட கொடூரமான ஆட்சி உருவாகும் போக்கிலேதான் சவுதியின் இன்றைய நகர்வுகள் உள்ளன. கிலாபத்துக்கு தலைமை தாங்க வேண்டிய சவுதி, மேற்குலகுக்கு அடிபணிவதும், தன் அரச ஆசனத்தை தக்கவைத்துக் கொள்ள போராடும் போக்கும், அதற்காக என்ன விலை கொடுக்கவும் தயாராக இருப்பதுவும் சவுதியின் இன்றைய அரசியல் போக்கை அவதாணிப்போர் மிக இலகுவாகவே புரிந்து கொள்ள முடியும்.

ஆனாலும் அல்லாஹ் நாடியவரையே இந்த நகர்வுகள் இருக்கும். சவுதி அரேபியா கிலாபத் ஆட்சிக்குள் உள்வாங்கப்படும். சிரியாவை மீட்பதற்கான அல்லாஹ்வின் படை அப்போதுதான் உருவாகும். அந்த ஆட்சி யார் தலைமையில் அமையும் என்பதையும் நபியவர்கள் முன்னறிவிப்புச் செய்துள்ளார்கள்.

கிலாஃபத் எனும் நல்லாட்சி குறித்து இரண்டு முன்னறிவிப்புக்கள் உள்ளன.

ஒன்று மஹ்தீ என்பவர் மூலம் ஏற்படும் நல்லாட்சி. மஹ்தீ என்ற நீதமான ஆட்சியாளர் ஒருவர் பிற்காலத்தில் தோன்றுவார். அவர் சிறப்பான இஸ்லாமிய ஆட்சியை நிறுவுவார் என்று ஹதீஸ்களில் கூறப்பட்டுள்ளது

حدثنا مسدد أن عمر بن عبيد حدثهم ح وثنا محمد بن العلاء ثنا أبو بكر يعني
ابن عياش ح وثنا مسدد قال ثنا يحيى عن سفيان ح وثنا أحمد بن إبراهيم قال
ثنا عبيد الله بن موسى أخبرنا زائدة ح وثنا أحمد بن إبراهيم قال حدثني
عبيد الله بن موسى عن فطر المعنى واحد كلهم عن عاصم عن زر عن عبد الله :
عن النبي صلى الله عليه و سلم قال " لو لم يبق من الدنيا إلا يوم " قال
زائدة في حديثه " لطول الله ذلك اليوم " ثم اتفقوا " حتى يبعث ஜ الله ஸ
فيه رجلا مني " أو " من أهل بيتي يواطىء اسمه اسمي واسم أبيه اسم أبي "
زاد في حديث فطر " يملأ الأرض قسطا وعدلا كما ملئت ظلما وجورا " وقال في
حديث سفيان " لا تذهب أو لاتنقضي الدنيا حتى يملك العرب رجل من أهل بيتي
يواطىء اسمه اسمي " ت ஃ 4 م قال أبو داود لفظ عمر وأبي بكر بمعنى سفيان .
قال الشيخ الألباني : حسن صحيح سنن أبي داود

"பூமியின் வாழ்நாளில் ஒரே ஒரு நாள் மீதமாக இருந்தால் கூட அந்த நாளை அல்லாஹ் நீட்டுவான். அதில் என் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரை அல்லாஹ் அனுப்புவான். அவர் பெயரும் என் பெயரும் ஒன்றாக இருக்கும். அவரது தந்தையின் பெயரும் என் தந்தையின் பெயரும் ஒன்றாக இருக்கும். அநீதியால்
நிரப்பப்பட்டுள்ள பூமி முழுவதும் நீதியால் நிரப்புவார் என்று நபிகள் நாயகம் ஸல் அவர்கள் கூறினார்கள்" அபுதாவுத் 4282

حدثنا عبيد بن أسباط بن محمد القرشي الكوفي قال حدثني أبي حدثنا سفيان
الثوري عن عاصم بن بهدلة عن زر عن عبد الله قال : قال رسول الله صلى الله
عليه و سلم لا تذهب الدنيا حتى يملك العرب رجل من أهل بيتي يواطئ اسمه
اسمي قال أبو عيسى وفي الباب عن علي و أبي سعيد و أم سلمة و أبي هريرة
وهذا حديث حسن صحيح هذا حديث حسن صحيح قال الشيخ الألباني : حسن صحيح سنن
الترمذي

"அரபு தேசத்தை என் பெயருடையை என் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் ஆட்சி செய்யும் வரை உலகம் அழியாது என்று நபிகள் நாயகம் ஸல் அவர்கள் கூறினார்கள்" திர்மிதி 2230

முதலில் அறிந்து கொள்ள வேண்டிய விஷயம் மஹ்தீ என்பவருக்கு மார்க்க அடிப்படையில் எந்த முக்கியத்துவமும் இல்லை. அவர் ஆன்மீக குருவாகவோ மார்க்கச் சட்ட நிபுணராகவோ திகழ்வார் என்றோ ஆதாரப்பூர்வமான எந்த முன்னறிவிப்பும் இல்லை. அவர் வலிமை மிக்க மன்னராக இருப்பார் என்பது தான் முன்னறிவிப்பின் முக்கிய சாரம். அவரது ஆட்சி பரந்து விரிந்து இருக்கும். அவரது ஆட்சியில் செல்வம் செழித்து ஓடும். நீதியும் நேர்மையும் கோலோச்சும் என்பது தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் முன்னறிவிப்பாகும்.

இதே போன்று ஈசா (அலை) அவர்கள் கியாமத் நாளுக்கு முன்பு வருகை தருவார்கள். அவர்களும் இந்த உலகத்தில் நல்லாட்சியை நிறுவுவார்கள் என்று ஹதீஸ்கள் கூறுகின்றன.

No comments:

Post a Comment