
சியோல்:வட கொரியாவின் எச்சரிக்கையை மீறி தென்கொரியா ராணுவம் இரு நாடுகளுக்கிடையே சர்ச்சை நிலவும் மஞ்சள் கடலில் ராணுவ ஒத்திகையை நடத்தியுள்ளது. துப்பாக்கிச்சுடுதல் போன்ற பல்வேறு பயிற்சிகள் நடந்த ராணுவ ஒத்திகையில் கடற்படைதான் முக்கியமாக கலந்துகொண்டது.
ராணுவ ஒத்திகை கொந்தளிப்பை உருவாக்கும் என்று எச்சரிக்கை விடுத்திருந்த வடகொரியா, திரும்ப தாக்குவோம் என மிரட்டியிருந்தது. ஆனால், வழக்கமான பயிற்சியைத்தான் ராணுவம் நடத்துவதாக தென்கொரியா விளக்கம் அளித்தது.
No comments:
Post a Comment