பக்கங்கள்

Wednesday, January 23, 2013

10 தீவிரவாதிகளுக்கு ஆர்.எஸ்.எஸ்ஸுடன் தொடர்பு: மத்திய உள்துறை செயலாளர்!


Shinde says, 10 terror-tainted people linked to RSS
புதுடெல்லி:இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நடந்த குண்டுவெடிப்புகளில் பங்கேற்ற குறைந்தது 10 தீவிரவாதிகளுக்கு ஆர்.எஸ்.எஸ்ஸுடன் தொடர்பு இருப்பதாக மத்திய உள்துறை செயலாளர் ஆர்.கே.சிங் தெரிவித்துள்ளார். மக்கா மஸ்ஜித், அஜ்மீர் தர்கா உள்ளிட்ட பல்வேறு குண்டுவெடிப்புகள் தொடர்பான விசாரணையில் இவர்களின் ஆர்.எஸ்.எஸ் உறவு நிரூபணமானதாக செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் ஆர்.கே.சிங் தெரிவித்துள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சர் சுசில் குமார் ஷிண்டே கூறியதுபோல ஏதேனும் தீவிரவாத தாக்குதல்களில் ஆர்.எஸ்.எஸ்ஸிற்கு தொடர்புண்டா? என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கையில் இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தீவிரவாத தாக்குதல்களில் தொடர்புடைய 10 நபர்களின் பெயரையும் அவர் வெளியிட்டார். சம்ஜோதா எக்ஸ்பிரஸ், அஜ்மீர் தர்கா குண்டுவெடிப்புகளுக்கு சூத்திரதாரியான, ஹிந்துத்துவா தீவிரவாதிகளாலேயே கொல்லப்பட்ட ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரக் சுனில் ஜோஷியின் பெயரும் இதில் அடங்கும். 2003-ஆம் ஆண்டு வரை சுனில் ஜோஷி தேவாஸ், மாவு ஆகிய இடங்களில் ஆர்.எஸ்.எஸ்ஸின் பிரச்சாரக்காக பணியாற்றியுள்ளான்.
தலைமறைவாக உள்ள சந்தீப் டாங்கே இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ள மற்றொரு ஹிந்துத்துவா தீவிரவாதி. இவன் மாவு, இந்தூர்,வடக்கு காசி, ஸாஜாபூர் ஆகிய இடங்களில் 2006-ஆம் ஆண்டு வரை ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரக்காக பணியாற்றியுள்ளான். சம்ஜோதா, மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்புகளில் கைது செய்யப்பட்ட லோகேஷ் சர்மா உள்துறை செயலாளர் வெளியிட்ட மற்றொரு தீவிரவாதி ஆவான்.தியோகர் நகர் ஆர்.எஸ்.எஸ் காரியாவாகாக இவன் பணியாற்றியுள்ளான்.சம்ஜோதா எக்ஸ்பிரஸ், மக்கா மஸ்ஜித், அஜ்மீர் தர்கா குண்டுவெடிப்புகளில் முக்கிய சூத்திரதாரியான சுவாமி அஸிமானந்தா 2007 வரை ஆர்.எஸ்.எஸ்ஸின் முன்னணி அமைப்பான வனவாசி கல்யாண் பரிஷத்தின் குஜராத் தலைவராக பணியாற்றியவன்.
சம்ஜோதா, மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்புகளில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ராஜேந்தர் என்ற சமுந்தர் ஆர்.எஸ்.எஸ் வர்க் விஸ்தாரக்காக பணியாற்றியவன். இவன் கைது செய்யப்பட்டுள்ளான். கோத்ராவில் ஆர்.எஸ்.எஸ் உறுப்பினரும், அஜ்மீர் குண்டுவெடிப்பு வழக்கில் கைதான முகேஷ் வஸானி, மாவு மற்றும் இந்தூரில் ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரக்காக பணியாற்றிய தேவேந்தர் குப்தா (மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு வழக்கில் கைதானவன்), 2007-ஆம் ஆண்டு ஷாஜன்பூரில் ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரக்காக பணியாற்றிய சந்திரசேகர் லிவே (மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு வழக்கில் கைதானவன்), ஆர்.எஸ்.எஸ் உறுப்பினரான கமால் சவுகான் (சம்ஜோதா, மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு வழக்குகளில் கைதானவன்), ஆர்.எஸ்.எஸ் ஸஹசாரி ராம்ஜி கல்சங்கரா (சம்ஜோதா, மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு வழக்குகளில் தலைமறைவு குற்றவாளி) ஆகியோர் மத்திய உள்துறை அமைச்சர் ஆர்.கே.சிங் வெளியிட்டுள்ள ஆர்.எஸ்.எஸ் தீவிரவாதிகள் ஆவர்.

No comments:

Post a Comment