பக்கங்கள்

Friday, April 6, 2012

ஷைமா படுகொலை:10 லட்சம் முஸ்லிம் அல்லாத அமெரிக்க பெண்மணிகள் ஹிஜாப் அணிகின்றார்கள்!


shaima death sparks 'Million Hijab March'
வாஷிங்டன்:ஹிஜாப் அணிந்ததற்காக அமெரிக்காவில் கொடூரமாக கொலைச் செய்யப்பட்ட ஈராக் முஸ்லிம் பெண்மணி ஷைமா அல்வாதிக்கு ஆதரவையும், ஒற்றுமை உணர்வையும் வெளிப்படுத்தும் விதமாக 10 லட்சம் முஸ்லிம் அல்லாத அமெரிக்க பெண்மணிகள் ஹிஜாப் அணிகின்றார்கள்.
ஃபேஸ் புக்கில் ஆரம்பித்த பக்கத்தின் மூலமாக இந்த ஆதரவையும், ஒற்றுமை உணர்வையும் அமெரிக்க பெண்மணிகள் வெளிப்படுத்தியுள்ளார்கள். ஃபேஸ் புக்கில் இது தொடர்பான பக்கத்தை(pages) துவக்கிய ஏப்ரல் 2-ஆம் தேதியே 10 ஆயிரம் பேர் ஆதரவை தெரிவித்தனர். கடந்த மார்ச் மாதம் 21-ஆம் தேதி ஷைமா அல் வாதி தனது சொந்த வீட்டில் வைத்து இஸ்லாத்தின் விரோதிகளால் கொடூரமாக கொலைச் செய்யப்பட்டார். “நீ பயங்கரவாதி! உனது நாட்டிற்கு திரும்பிச்செல்!” என்று எழுதப்பட்ட குறிப்பு சம்பவம் நிகழ்ந்த இடத்தில் இருந்து கைப்பற்றப்பட்டது.

No comments:

Post a Comment