பக்கங்கள்

Tuesday, February 21, 2012

ஈரான் மீது தாக்குதல் நடத்தினால் எதிர்விளைவுகள் கடுமையாக இருக்கும் – இஸ்ரேலுக்கு பிரிட்டன் எச்சரிக்கை


Britain warns Israel over military action against Iran
லண்டன்:ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்துவது அறிவுப்பூர்வமானது அல்ல என்று இஸ்ரேலுக்கு பிரிட்டன் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஒரு தலைபட்சமாக அத்தகையதொரு நடவடிக்கையை மேற்கொண்டால் எதிர்விளைவுகள் மோசமாக இருக்கும் என்று இஸ்ரேல் அதிகாரிகளிடம் கூறியதாக வெளியுறவுத்துறை செயலாளர் வில்லியம் ஹேக் அறிவித்துள்ளார்.
இரண்டு விதமான தந்திரங்கள்தாம் ஈரான் மீது தற்போது செலுத்தவேண்டும். ஒருபுறம் தடைகளை ஏற்படுத்தியும், நிர்பந்தம் அளித்தும் அவர்களை கட்டுக்குள் நிறுத்தவேண்டும். இன்னொரு புறம் பேச்சுவார்த்தைகள் மூலமாக பிரச்சனைக்கு தீர்வு காணவேண்டும். எந்த வழிகளை முன்வைத்தாலும் ராணுவ தாக்குதல் பெரிய எதிர்விளைவுகளை உருவாக்கும் என்று ஹேக் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment